Thursday, August 20, 2020

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்களில் இதுவும் ஒன்று? அந்தப் பொருளை ஏன் வைக்கக் கூடாது என்ற காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

*பொதுவாகவே, நம் வீட்டுப் பூஜை அறையில் எந்தெந்த தெய்வத்தின் திருவுருவப் படங்களை வைக்க வேண்டும், எந்தெந்த தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைக்கவே கூடாது, என்ற சந்தேகம் இன்னும் நம்முடைய மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய வீட்டு பூஜை அறையை எப்படி அமைத்துக் கொண்டால், நம்முடைய வாழ்வு சிறப்பாக இருக்கும், நம் வீட்டு பூஜை அறையில் உள்ள திருவுருவப்படங்கள், உயிரோட்டத்தோடு இருக்க எப்படி பூஜை செய்ய வேண்டும், என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.*

*ஒருவருடைய வீட்டு பூஜை அறையில் உடைந்த சிலைகள், உடைந்த கண்ணாடியை கொண்ட, மிகவும் பழைய துருப்பிடித்த, திருவுருவப்படங்கள் கட்டாயம் இருக்கவே கூடாது. சரி, இந்த உடைந்த சிலைகளையும், உடைந்த சுவாமி படங்களையும், சரி செய்து விட்டு, அதன் பின்பு அந்த சிலைகளை, அதே திருவுருவப் படங்களை, மீண்டும் நம் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாமா? கட்டாயம் வைத்துக் கொள்ளலாம். உடைந்த படங்களை சரி செய்துவிட்டு, மீண்டும் நம் வீட்டில் அந்த படத்தை தாராளமாக வைத்து பூஜை செய்யலாம். உடைந்த சிலையை சரி செய்ய முடியும் என்றால், சரி செய்த சிலையை மீண்டும் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை.*

*அடுத்ததாக, நிறைய பேருக்கு உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா, என்ற கேள்வி இன்றளவும் இருந்துதான் வருகின்றது. காளி, பிரத்தியங்கிராதேவி, உக்கிரமான நரசிங்க மூர்த்தி, இன்னும் பல கோபமான சுவாமி படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? உங்களுக்கு நரசிம்மரையும், காளி தேவியையும் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய தீவிர பக்தர்கள் நீங்கள் என்றால், தாராளமாக அந்த தெய்வங்களை உங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது*

*எந்த தெய்வங்களும் நமக்கு கெடுதல் செய்வதற்காக அவதாரம் எடுக்கப்பட்டவை அல்ல. அவதாரத்தின் நோக்கம், கெடுதலை அழிக்க வேண்டும் என்பதால் தான், அந்த தெய்வங்கள் உக்கிர நிலையில் இருக்கின்றது. அந்த தெய்வங்களை பார்த்து வழிபடுவதன் மூலம், உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும், குழந்தைகளுக்கும், மனதில் எந்தவிதமான பயனும் ஏற்படாது, என்ற நிலை இருந்தால், தாராளமாக உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த தெய்வங்களை வைத்து வழிபடலாம். அந்த தெய்வத்தின் திரு உருவப் படங்களை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம், கொஞ்சம் மன உறுத்தல் இருந்தால் கூட, அதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.*

*சனீஸ்வர பகவானின் திரு உருவப் படங்களையும், நவகிரகங்களின் திருவுருவப்படங்களையோ, நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது அவ்வளவு சரியான முறை அல்ல என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இவர்கள், இறைவனுடைய கட்டளைக்கு கீழ், பணிபுரியும் கிரகங்கள் என்பதால், இவர்களை கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டுமே போதுமானது என்று சொல்லப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள், சனீஸ்வர பகவானின் படத்தையும் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம்.*

*அடுத்ததாக, நம் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் திருவுருவப் படங்கள்! இறந்தவர்களை தெய்வமாக நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், தெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு சமமாக, இறந்தவர்களின் திருவுருவப் படங்களை வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டின் பூஜை செய்யும் இடத்தை தவிர்த்து, மற்ற எந்த இடத்தில் வேண்டும் என்றாலும், இறந்தவர்களின் திரு உருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இறந்தவர்களின் படத்தை வடக்குப்பார்த்த சுவற்றில் மாட்ட வேண்டும். அந்தப்படம் தெற்கே பார்த்தவாறு அமைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*

*அடுத்ததாக, மிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் எந்திரங்களை பற்றித்தான். நிறைய பேர் வீட்டில் இப்போது எந்திரங்களை வைத்து வழிபட தொடங்கி உள்ளார்கள். இந்த பரிகாரத்திற்க்கு எந்திரம்! அந்த பரிகாரத்திற்கு எந்திரம்! என்று நல்ல முறைப்படி பூஜை செய்து எந்திரங்களை வாங்கி கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது என்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.*

*ஆனால், அந்த எந்திரங்களில் தெய்வங்களை பிரதிஷ்டை செய்தாலும், அந்த தெய்வங்கள் 12 ஆண்டுகள் மட்டும்தான், அந்த எந்திரத்தில், வாசம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது12 ஆண்டுகள் முடிந்ததும், அந்த எயந்திரத்தில் இறைவன் கட்டாயம் வசிப்பதில்லை! இதோடு மட்டுமா? தெய்வம் வெளியேறிய பின்பு, அந்த எயந்திரத்திற்குள் கெட்ட சக்தியானது வந்து குடி கொண்டுவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (சில பேர் சொல்லி நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த எந்திரத்தை வைத்து, கொஞ்ச காலம் நாங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தோம். ஆனால், தற்சமயம் சூழ்நிலையே தலைகீழாக மாறிவிட்டது. சமீபகாலமாக தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்று! இதற்கு காரணமும், அவர்கள் வீட்டில் வைத்த, அந்த எந்திரத்தில் எதிர்மறை ஆற்றல் குடி கொண்டதால் கூட இருக்கலாம்.)*

*ஆகவே, எந்திரங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாதவர்கள் யாரும், அதை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது அவ்வளவு சரியான முறை அல்ல. முடிந்தவரை வீட்டில் எந்திரங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும். கோவிலில் வசிக்கும் இறைவனே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்தால்தான், அந்த இடத்தில், அந்த சிலையில் இருப்பாராம். இல்லையென்றால் அந்த கோவிலின் தல விருட்சத்தில், அந்த இறைவன் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். மிகவும் பெரிய கோவில் என்றால் 24 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான முறை. இதே சாஸ்திரம் தான் எந்திரங்களுக்கும்.*

*மேரு சக்கரம், ஸ்ரீ சக்கரம் போன்ற பொருட்களை உங்கள் வீட்டில் வாங்கி வைத்து இருந்தாலும், அதற்கான, முறையான வழிபாட்டை தினம்தோறும் செய்து ஆகவேண்டும். ஒரு பொருளை வைத்து நம் வீட்டு பூஜை அறையில், எப்படி பராமரிப்பது என்று தெரியாவிட்டால், தயவு செய்து அந்த பொருட்களை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வாங்கி வைக்காமல் இருப்பது தான் நல்லது.*

*அழகுக்காக, அலங்காரம் செய்வதற்காக வேண்டி, உங்களுக்கு அந்த பூஜை பொருள் மிகவும் பிடித்திருக்கிறது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது, என்ற காரணத்திற்காக எல்லாம், சக்கரங்கள், சங்கு, சாளக்கிராமம் போன்ற பொருட்களை வாங்கி சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நம் வீட்டில் இருக்கும் தெய்வத்தின் திரு உருவப் படங்களை போதுமானது.*

*உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இருக்கும் திருவுருவப் படங்களை சுத்தமாக துடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, தினம் தோறும் புதிய பூக்களை சாத்தி, தீபம் ஏற்றி, தீப ஆராதனை காட்டி, உங்களால் முடிந்த மந்திரத்தை உச்சரித்து அல்லது மந்திரங்களை ஒலிக்க செய்து, முடிந்த நெய்வேதியத்தை படைத்து, குலதெய்வத்தை மனதார நினைத்து, உண்மையான பக்தியோடு, மன நிறைவோடு வழிபட்டாலே போதும். உங்கள் பூஜை அறையில் இருக்கும் இறைவன் உயிரோட்டத்தோடு இருப்பார், பக்தியோடு அந்த இறைவனின் திருவுருவப் படத்தில் உள்ள கண்களை பார்த்தாலே, அந்த கடவுள் உங்களிடம் உரையாடுவார்

Wednesday, August 19, 2020

அருட்தந்தை அருட்காப்பு

அருட்தந்தை அவர்களின் இளமை பயணம், அவ்வளவு எளிமையானதல்ல.

பல தடைகளை அழகாக துணிவோடு தன்னுணர்வோடு கடந்து வந்தவர்.

பெருமளவு ஜவுளி உற்பத்தி செய்து, செல்வந்தராக வாழ்ந்த போதும் சரி, அத்தனையும் இழந்து நின்ற போதும் சரி, தன்னிலை மறவாமல் துணிவோடு தன் இலக்கை நோக்கி வாழ்ந்தவர்.

அவர் சிறப்போடு வாழ்ந்த போது, அவரோடு பழகிய  ஒரு அம்மையார் சில வருடம் கழிந்து அவரை சந்திக்க வந்த போது, அனைத்தையும் இழந்து, எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் கலங்கி கண்வடித்தார்.

அவருக்கு ஆறுதல் கூறும்போது... கலங்காதீர்கள். என் உடமைகள் என்று நான் நினைத்தவை, இப்போது வேறிடத்தில் உள்ளது. இடம் மாறி உள்ளது. 
அவ்வளவுதான் " என்று மென்மையாக கூறினார்.

தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்ட போது, என் கடன் தொல்லை எல்லாம் போக வேண்டும் என்று தியானம் செய்யும்போது, சங்கல்பம் கூறினார்.

பிரபஞ்ச பேராற்றல் அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. கடன் தொல்லை தீர்ந்தது. ஆனால் அவர் மிக எளிமையான வாழ்கைக்கு மாற வேண்டி இருந்தது.

அந்த அனுபவம், அவரை சிந்திக்க வைத்தது.

கடன் தொல்லை மட்டும் தீர வேண்டும் என்று பிரார்தித்ததால், கடன் தொல்லை தீர்ந்தது. மற்ற வாழ்வின் வளங்களை நாம் கேட்கவில்லையே என்ற தீர்க்கமான சிந்தனையின் விளைவே இப்போது நாம் அனுதினமும் கூறும்சங்கற்பம்.

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்.

அருட்காப்பும் இந்த தொடர் ஞான சிந்தனையின் விளைவே.

இறையாய், குருவாய், வழியாய், காப்பாய்.

இறைவன் நாமம் உச்சரிப்பின் பலன்

தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர்.

அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன்,  பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியவில்லையே தவிர, பழக்கத்தினால் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு நடந்து செல்வான்.

கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை.

எப்படியோ ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி, நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான்.

காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது.

க்ருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். கண்ணும் தெரிடவில்லை. பொழுது போகவேண்டாமா?

அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. பெருமை அறியாமல் சொன்னபோதும், நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.

ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும்  பார்த்ததும் விழுந்து வணங்கினர்.

யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால்,  க்ருஷ்ணா என்றார். 

ஸ்வாமி எங்களைக் காப்பாத்துங்க..

ஏம்பா, என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாத்தறது?

ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில்‌ இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை.

என்ன ஆபத்து?

ஸ்வாமி, நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. திடீர்னு இன்னிக்கு காலைல அந்தக் குதிரை காணாமப் போச்சுது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு உத்தரவு போட்டிருக்கார். நீங்கதான் காப்பாத்தணும்.

அதுக்கு நான்  என்ன பண்ணமுடியும்?

ஸ்வாமி, நாங்களும் காலைலேர்ந்து தேடிட்டோம். குதிரையைக் கண்டுபிடிக்க‌முடியல. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னா எங்க உயிர் தப்பிக்கும்.

சிரித்தார். ஏம்பா, எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு எங்க போவேன்?

ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாச்சும் சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரியுது.

இதென்னடா வம்பாப் போச்சு? 

தவித்தார் அவர். இருவரும் விடுவதாய் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று,

சரி, இங்கேயிருந்து நேரா கிழக்கால போங்க, அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அப்புறம் திரும்பி வடக்கே போனால், ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா, உங்க குதிரை கிடைக்கும்‌ 

என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார்.

அவர்களும் சரி ஸ்வாமி, மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.

அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.

மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள்.

குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன். 

எப்படிக் கிடைத்தது?

ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ஒழுங்காக உண்மையைச் சொல்லுங்கள்.

நீங்களே திருடி விற்கத் துணிந்தீரோ? தண்டனைக்கு பயந்து திரும்பிக் கொண்டுவந்தீரா?

இல்லை இல்லை அரசே..

என்று காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள்.

அரசனுக்கு மிகவும் ஆச்சரியம்.

நம்‌எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும்.

சரி, நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன்.

மறுநாள் காலை வீரர்களோடு, அரசரும்,  பெரிய பரிவாரத்துடனும், வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்தி நின்றனர்.

பயந்துபோனார் அவர்.

அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று.

அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.

கூனிக் குறுகிப்போனார் அவர். வாயில் வந்ததையெல்லாம்‌ சொன்னதே பலித்துவிட்டதா?

இத்தகைய வாக்சித்தி எப்படி வந்தது?

வயிற்றுப் பிழைப்பிற்காகவும், பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா?

நிஜமாக உணர்ந்து சொன்னால்?

அழுதார்.

சிலநாட்கள் அரண்மனையில்  இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி க்ருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது, ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு, க்ருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்து, அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு டோலோத்ஸவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார்.

கண் தெரியாத அந்த மஹான் சூர்தாஸர் ஆவார். 

அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !


Thursday, August 13, 2020

கோவிலில் மணி ஓசை

கோவிலில் மணி ஓசையை  இனி மறக்காதீங்க....!

#கோவில் #மணியில் #ஒளிந்துள்ள #ரகசியம்...!!

🔔 கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள்
கூறியிருக்கின்றனர்.

🔔 #பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். 

🔔 ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் #ஓசை #எதிர்மறை #சக்திகளை #விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் #நேர்மறை #சக்தியை #அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.

🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.

🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

🔔 அதனால் தான் கோவில் மணி சப்தம் கேட்கும்போதெல்லாம் ஒரு விதமான தனி உணர்வு கிடைக்கும்.

Sunday, May 10, 2020

பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வித்தியாசம்....

#பிச்சைக்கும், #பிக்ஷைக்கும் #உள்ள #வித்தியாசம்....

"பிச்சை" 
என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும்.

ஆனால், 
"பிக்ஷை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும்.

விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”.

சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிக்ஷை”.

பிச்சை இடுவது என்பது கருணை, 
ஆனால் பிக்ஷை நமது கடமையாகும்.

பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும், 
பாவம் ஒன்றும் இல்லை, 
ஆனால் பிக்ஷை இடாது போனால், பாவம் பின்தொடரும்.

ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை, 
கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள்.

இப்படி 
பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொள்ளவேண்டும்.

Friday, May 1, 2020

தீர்க்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்வோம்

தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

தீர்க்க சுமங்கலி பவா என்றல் என்ன?   அறிந்துகொள்வோம்

🌼 தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼  80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !

இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼  பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு

⚜ சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜ செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
⚜ சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜ புதனுக்கு ஒரு வருடமும்,
⚜ வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜ வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜ சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
⚜ ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
⚜ கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼  ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84  கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.*

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

*⚜அக்னி, ⚜சூரியன்,
*⚜சந்திரன்,.  ⚜வாயு,
*⚜வருணன்,
*⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
*⚜அமிர்த கடேஸ்வரர்,
*⚜ நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
*அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
ஓம் நமசிவாய...

Wednesday, April 22, 2020

நட்சத்திர காயத்ரி மந்திரம்

நட்சத்திர காயத்ரி மந்திரம்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் மாற்றம் காணலாம்.

#அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

#பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

#கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

#ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

#மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

#திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

#புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

#பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

#ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

#மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

#பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

#உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

#அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

#சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

#சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

#விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

#அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

#கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

#மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

#பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

#உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

#திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

#அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

#சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

#பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

#உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

#ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

Thursday, April 16, 2020

'பிரதி தினமும் ஸ்ரீதுர்கா ஸப்த ச்லோகி பாராயணம் செய்யுங்கள்.

'பிரதி தினமும்'
#ஸ்ரீதுர்கா #ஸப்த #ச்லோகி பாராயணம் செய்யுங்கள்.

ஸ்ரீ தேவி மாஹாத்ம்யத்தில்
உள்ள மொத்த 700 ச்லோகங்களின் ஸாரமாக இந்த 7 ச்லோக்ங்களை நம் ஆன்றோர் கண்டறிந்துள்ளனர். இந்த ஏழு ச்லோகங்களுமே மிகவும் அற்புத சக்தி கொண்டவை.

1)ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா

பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி

(1)ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜீவன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

2)துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா

(2) ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.

3)ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே

(3) எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான
ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

4)சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே

(4) தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாகஉண்டாகும்.

5)ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே

பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே

(5) அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.

6)ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா

ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்

த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்

த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி

(6)உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.

7)ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி

ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

நன்றி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

Saturday, February 29, 2020

சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள்

சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள்

ஏழரை சனி, ஜென்ம சனி, பாத சனி, அஷ்டம சனி இப்படி சனியின் பிடியில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுபவர்கள் அதன் தொல்லைகளிலிருந்து விடுபட கீழ்க்கண்ட எளிய பரிகாரங்கள்

குடும்பத்தில் குலதெய்வபலத்தைக்கூட்டினாலே சனி பகவான் பலம் குறையும் அத்துடன்

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2. சனிக்கிழமை தோறும்  சனி பகவா னுக்கு  மண் அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது வாழைப்பழமாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். அவருடைய வாகனமான நாய்களுக்கு உணவு அளிக்கலாம்

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. வேத பாடசாலையில் வேதம்படிப்பவர்களுக்கு  உதவி செய்யலாம் அத்துடன்அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

11. கோமாதா பூஜை செய்யலாம்.

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

14.அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

19. தினமும் சிவ நாமம்  ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

Wednesday, February 12, 2020

ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும்

*ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் !*

உண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்

ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்கினம் ஆன்மாவையும் , சந்திரன் நின்ற இடம் ராசி எனப்படும், ராசி இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம் , அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் . கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் , அதன் அதிபதி . .

இதனாலேயே , குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக , மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள் . அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் .

அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் . ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால் , எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான் . எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள் . குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள் . ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று , உங்கள் ஜாதகம் மூலம் , ( தீமைகள் அகல , தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும் , ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால் , அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது . தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் . ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் , சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது . வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது .

ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன் . வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி , இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது . இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் . அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும் . நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள் . இது தவறு . அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100- க்கு 100 வெற்றியைப் பெறலாம் . பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட , பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை .