Sunday, May 10, 2020

பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வித்தியாசம்....

#பிச்சைக்கும், #பிக்ஷைக்கும் #உள்ள #வித்தியாசம்....

"பிச்சை" 
என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும்.

ஆனால், 
"பிக்ஷை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும்.

விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”.

சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிக்ஷை”.

பிச்சை இடுவது என்பது கருணை, 
ஆனால் பிக்ஷை நமது கடமையாகும்.

பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும், 
பாவம் ஒன்றும் இல்லை, 
ஆனால் பிக்ஷை இடாது போனால், பாவம் பின்தொடரும்.

ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை, 
கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள்.

இப்படி 
பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment