Wednesday, November 27, 2019

கருட புராணம் - புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்

கருட புராணம் - புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்
குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு,
மூன்று வயது வரையில் பாலகன்,

ஆறு வயது வரையில் குமரன்,

ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும்.

பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான்.

மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும்.

24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும்.

ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும்

. 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விருக்ஷாற்சனம் செய்ய வேண்டும். ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது.

புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும்.

பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான்.

நல்ல புத்திரனையும் பெறுவான்.

பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர்.

தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும்.

ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான்.

மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான்.

மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர்.

ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான்.

கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான்.

பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம்.

சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.
தொடரும்...

Monday, November 4, 2019

சில ஐதீகம்

விளக்கில்லாத கோயிலில் வழிபாடு செய்யகூடாது மணியின்றி பூஜை செய்ய கூடாது கோயில் திரை மூடி இருந்தால் வணங்ககூடாது பலிபீடம் கொடிமரம் ,ஆகிய இடத்தில் மட்டுமே விழுந்து கும்பிடவேண்டும் கோயிலில் அபிசேக காலத்தில் வளம் வர கூடாது கோயிலில் கோபுர நிழல்,கொடிமர நிழல் மிதிக்க கூடாது சண்டிகேஸ்வரர் முன் கைகளை தட்டகூடாது மாடி உச்சியின் மீதோ, மரக்கிளை மீதோ இருந்து கொண்டு சாமி தரிசனம் செய்யகூடாது பவளசரத்தை குழந்தைகள் அணிந்தால் நோய், தீய சக்தியிலிருந்து விடுபடலாம் பணி நீரை சேகரித்து குடித்து வர சகல நோய்களும் தேறும் பன்னிரண்டு வயத்துக்கு பின் தான் கரும வினைகள் பாதிக்கும் தலைக்கு மேல் இரு கைகளாக் கும்பிட்டால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெருகும் பச்சை நிறம் கவர்சிகரமான பிராண சக்தியை குறிக்கும் தன முகத்தை தானே தியானம் செய்தது வந்தால் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் பெயரில் பூ ,ஆறுகள் ,அர்த்தமில்லாத சொல் இருப்பதை தவிர்க்க வேண்டும் பெயரில் திலகம், புண்ணியம் ,போன்ற சொல் இருந்தால் இல்லறவாழ்வு சிறக்காது தாடை அழகாக இருந்தால் கௌரவமான தொழில் செய்வார் நெற்றியில் வெட்டுக்காயம் இருந்தால் காதல் திருமணம் ஏற்படும் தாடையில் வெட்டுகாயமோ, தழும்போ இருந்தால் தொழிலில் பிரச்சனை இருக்கும் அழகிய பல் உடையவன் மனைவி மீது அன்பாக இருப்பான் சொத்தை பல் அல்லது பல் வலி உடையவர் தொழிலில் பல பிரச்சனை இருக்கும் விகாரமான பல் உடையவர் விசித்திரமான தொழிலை செய்வார் இடது கண் துடித்தாள் தாய்க்கு நோய் வரும் கோயிலின் கோபுரம் விட வீட்டின் உயரம் குறைவாக இருக்கவேண்டும் சரீர உணர்சியுடன் சாமியை தரிசனம் காணக்கூடாது பெருமாள் ஏதிரே நின்று கும்பிடக்கூடாது கோயிலின் திருநீறு,குங்குமம்,பூ, போன்றவற்றை கீழே சிந்த கூடாது பெருமாள் கோயிலுக்கு சென்றால் துளசி, தீர்த்தம் ,சடாரி வாங்கிகொண்டுதான் வரவேண்டும் காது இடுக்கு புஸ்பம் வைக்ககூடாது துளசி தளத்தை தலையில் வைக்ககூடாது ஈர உடை,ஒருடையுடனும்,ஆடையில்லாமலும் சாமி கும்பிட கூடாது கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் போதுமானது சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும் சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துகொள்ளகூடாது தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச்செல்லக்கூடாது. வலது கண் துடித்தாள் தந்தைக்கு பாதிப்பு வீட்டில் ஈசான்ய மூளை குடும்ப தலைவரை குறிக்கும் நெற்றி சிறிதாக இருந்தால் காதல் வயபடுவார்கள் வீட்டில் பூஜை அரை சிறிதாக இருந்தால் வீட்டு தலைவர் சிரமத்தில் இருப்பார் அமிர்திஸ்ட் கல் உங்களிடம் இருந்தால் நற்பலன்கள் கிடைக்கும் அமிர்திஸ்டை செவ்வந்திகல் லட்சுமிகல் என்றும் தமிழகத்தில் அழைப்பார்கள் செவ்வந்தி பொழுதின் நிறத்தை பிரதிபலிக்கிறது இதனை வைத்து இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பை தருகிறது இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும். காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது சுத்தமானஇடத்தில் தான் ஜபிக்கவேண்டும். கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி .. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்கவேண்டும். தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக்கொள்வதும் கூடாது திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும் அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது .. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது ) கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது . நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது